தாம்பரம், ஆக.5- தாம்பரம் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக சனிக்கிழமை முதல் வரும் 14ம் தேதி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் பகல் மற்றும் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும் மற்றும் இரவு 10 மணி முதல் 11.59 மணி வரை யும் சென்னை கடற்கரை ரயில் நிலை யத்திலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல் பட்டு செல்லும் ரயில்கள் பல்லா வரம் ரயில் நிலையம் வரையும், அதே போல செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப் படுகிறது.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பயணிகளுக்கு ரயில் சேவை ரத்து குறித்த தகவல்கள் சரியாக தெரி யாததால், அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதோடு தாம்பரம் பேருந்து நிலையத்தில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகளவில் காணப் பட்டதால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், கிளாம்பாக் கம், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பு பணிக்காகவும் 175 காவல் அதிகாரிகள் தலைமையில், காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர் கள் உடனுக்குடன் போக்குவரத்தை சீர் செய்தனர். தாம்பரம் பேருந்து நிலையத் தில் கூட்ட நெரிசலை தவிர்க்க பயணி கள் அனைவரும் தாம்பரம், இரும் புலியூர் பேருந்து நிலையம், இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலை யங்களை பயன்படுத்திக்கொள்ளு மாறும் ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டிருந்தது.
இருப்பினும், இதுகுறித்து தகவல் தெரியாத வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த பயணி களுக்கு அவர்கள் செல்லும் இடங்கள் குறித்து கேட்டு எவ்வாறு செல்ல வேண்டும், எந்த பேருந்தில் பயணிக்க வேண்டும் என பணியில் இருந்த போலீசார் ஆலோசனைகள் வழங்கி உதவி செய்தனர்.