சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்க
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கி சனிக்கிழமையன்று (ஏப்.19) தாம்பரத்தில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தென்சென்னை-2 கிளையின் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. கிளைத்தலைவர் டில்லிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செயலாளர் ஹெலன் தேவகிருபை, மாநில உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் எம்.விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களிடம் மின் ஊழியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கி சனிக்கிழமையன்று (ஏப்.19) கிண்டியில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தென்சென்னை கிளைச் செயலாளர் டி.பண்டாரம் பிள்ளை தலைமையில் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.