tamilnadu

காணொலி காட்சி மூலம் வாதிட முடியுமா? - நளினிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

 சென்னை, ஜூன் 18- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- ‘கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக நான் சிறையில் அடைக்கப்பட் டுள்ளேன். என்னுடைய மகள் இங்கிலாந்தில் பாட்டி யுடன் வசித்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அதற்காக, எனக்கு 6 மாதம் பரோல் வழங்க சிறைத்துறை தலைவர் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தேன். இதுவரை பரிசீலிக்கப் படவில்லை. நான் கடந்த 28 ஆண்டுகளாக பரோலில் வராமல், சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளேன். எனவே எனக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த மனு மீதான விசாரணையில், நானே ஆஜராகி வாதிட உள்ளதால், அதற்கு அனுமதி வழங்க சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்’. இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார்  ஆகியோர் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினியை உயர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது. அவ்வாறு செய்தால், தேவையில்லாத பிரச்சனைகள் உருவா கும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்காத நீதிபதிகள், ‘நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு என்ன சிக்கல் உள்ளது?’ என்று கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு செவ்வாயன்று (ஜூன்18) மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது, ‘நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள், ‘பரோல் கேட்டு தொடரப்பட்டுள்ள இந்த மனுவுக்கு நளினி  உயர் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து தான் வாதிட  வேண்டும் என்பது அவசியம் இல்லை. அவர் விரும்பினால், காணொலி காட்சி மூலம் வாதிட லாம். எனவே, காணொலி காட்சி மூலம் சிறையில்  இருந்தபடியே இந்த வழக்கிற்கு வாதிட விருப்பமா? என்று நளினியிடம் கேட்டுச் சொல்லுங்  கள்’ என்று நீதிபதிகள் கூறினர். விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.