நியாயவிலைக் கடையில் வழங்கப்பட்டு வந்த இலவச அரிசிக்கு பதில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுவதை கைவிட்டு மீண்டும் நியாயவிலைக் கடை யில் இலவச அரிசி வழங்கக் கோரி புதுச்சேரி முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பிரச்சா ரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மதகடிப்பட்டில் நடை பெற்ற பிரச்சாரத்தில் அகில இந்திய துணைத்தலைவர் சுதாசுந்தரராமன் கலந்து கொண்டுபேசினார். சிபிஎம் கொம் யூன் செயலாளர் அன்புமணி பிரச்சாரத்தை வாழ்த்திப் பேசினார். இதில் நிர்வாகிகள் சந்திரா, சத்தியா, இளவரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.