tamilnadu

img

பெரியபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படும்

திருவள்ளூர், ஏப்.14- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஞாயிறன்று (ஏப்.14) மஞ்சாங்கரனையில் துவங்கி,கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், தாராட்சி, சூளைமேனி, ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில்பிரச்சாரம் செய்தார்.திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கி.வேணு, ஒன்றியச்செயலாளர் மூர்த்தி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஏ.ஜி.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ரவி, வட்டக் குழு உறுப்பினர்கள் பி.அருள்,வாசு, கன்னியப்பன், விசிக தொகுதி துணைச் செயலாளர் பாபு, மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அருள் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பிரச்சாரத்தின் போது வேட்பாளர் ஜெயக்குமார் பேசுகையில், “போக்குவரத்து நெரிசல் காரணமாக பஜாரில்மக்கள் திணறுகின்றனர். இதனால் மக்கள் நலன் கருதி பெரியபாளையம், ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்படும். அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படும்” என்றார்.  

;