பணியின் போது அரசுப்பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்
போக்குவரத்துத்துறை உத்தரவு
சென்னை, டிச.23- அரசு பேருந்துகளை இயக்கும்போது செல்போன் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர், செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, பேருந்தை ஓட்டிச் சென்றவர் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பணிமனையை சேர்ந்த ஓட்டுநர் கனகராஜ் என்பது தெரியவந்தது. அவர், தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றபோது செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கியது கண்டறியப்பட்டது. அதன்பேரில், கனகராஜ் மீது நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அரசு பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாள்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர். தொடர்ந்து செல்போனை பயன்படுத்திக் கொண்டு ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும் வீடியோ வெளிவருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும், போக்குவரத்துத்துறை சார்பில் உத்தரவு அனுப்பப்பட்டு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியரின் சொத்துகள் தனிப்பட்டது அல்ல: உயர்நீதிமன்றம்
சென்னை, டிச.23- கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பேராசிரியர் தொடர்பான வழக்கில், அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் குறித்த விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நீர்வளத் துறை உதவிப் பொறியாளரின் சொத்து விவரங்களை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. அதில், மனுவை மீண்டும் பரிசீலித்து 2 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க மாநில தகவல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளது. சொத்து விவரங்களை வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து சீனிவாசன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர்
சென்னை, டிச.23- சென்னை தலைமைச் செயலகத்தில் திங்களன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள் பயன் பாட்டிற்காக ரூ.8.46 கோடி மதிப்பிலான 95 வாகனங்களின் சேவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், 21 மாவட்டங்களில் ரூ.64.44 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்ட அலுவலகக் கட்டிடங்களை காணொலிக் காட்சி வாயிலாக அவர் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த 84 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. விளையாட்டுத்துறை மூலம் 3 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் சர்வதேச, தேசிய அளவிலான போட்டியில் வென்றோருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, முதல்வர் மு.க. ஸ்டாலினுடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் உடனிருந்தனர். பணி நியமன ஆணைகள் வழங்கியதற்காக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பா?
இபிஎஸ்-க்கு அரசு விளக்கம்
சென்னை, டிச.23- தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி, தில்லி குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறவில்லை என எதிர்க்கட்சித் தலை வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதையடுத்து, தில்லியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்ட தாக வதந்தி பரப்பப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள் ளது. 2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் தில்லியில் வருடந் தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப் படுவதாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்புக்குழு தெரிவித்துள்ளது. அந்த விளக்கத்தில், “தில்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும். ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுவது, அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இய லாது. 2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி 2026 ஆண்டு அணி வகுப்பிலே பங்கேற்க இயலும்” என்றும் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்புக் குழு தெளிவுபடுத்தியுள்ளது.