tamilnadu

வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளை

சென்னை, ஏப். 27- சூளைமேட்டில் வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சூளைமேடு பாரி தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பொன்னி வீட்டு வேலை செய்து வருகிறார். மகள் பிரியா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.வெள்ளியன்று காலையில் ராமகிருஷ்ணன் அவரது மனைவி, மகள் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் ராமகிருஷ்ணன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டிருந்தது. பீரோவில் இருந்த 13 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து சூளைமேடு காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

;