tamilnadu

img

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தலைவர் கே.சீனிவாசன் பணி நிறைவு விழா

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தலைவர் கே.சீனிவாசன் பணி நிறைவு விழா

சென்னை, ஏப்.30- பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில உதவிச் செயலாளர் கே.சீனிவாசன் பணி நிறைவு பாராட்டு விழா புதனன்று (ஏப்.30) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைப்பின் பொதுச் செயலாளர் பி.அபிமன்யு பேசுகையில், “தன்னுடைய முழு நேரத்தையும் தொழிற்  சங்கத்தின் வளர்ச்சிக்காவும், ஊழியர்களின் நலனுக்கா வும் செலவிட்டவர். குடும்ப சூழ்நிலையை யும் பொருட்படுத்தாமல் தொழிற்சங்கப் பணியை தொய்வின்றி தொடர்ந்தவர். தொழிற்சங்கத்தின் விளம்பரமின்றி, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் தொழிற்  சங்கத்தின் வளர்ச்சிக்கு பேருதவி புரிந்தவர் சீனி வாசன்” என்று பாராட்டு ரைத்தார். “சங்கத்தின் பொரு ளாளர் உள்ளிட்ட பொறுப்பு களை திறம்பட நிறை வேற்றியவர். அனைவரை யும் அமைப்பின் வழிநின்று ஒருங்கிணைக்கக் கூடிய வராக விளங்கினார்” என்று தலைவர்கள் புகழ்ந்துரைத்தனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், துணைப் பொதுச்செயலாளர் எஸ்.செல்லப்பா, சென்னை மாநில தலைவர் பாஷா, செயலாளர் எம்.ஸ்ரீதர சுப்ர மணியன், ஓய்வு பெற்றோர் சங்கத்தின் ஆலோசகர் சி.கே.நரசிம்மன், செய லாளர் ஆர்.ராஜசேகர், என்எப்டிஇ உதவிச் செயலாளர் நடராஜன், எஸ்.டி.சரவணன் உள்ளிட்டோர் பேசினர்.