பாதாளச் சாக்கடை குழாயில் உடைப்பு: சாலையில் கழிவுநீர் வெளியேற்றம்
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் பொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சாலைக்கு அடியில் செல்லும் சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்துச் செல்வதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். திருப்பூர் மாநகராட்சியில் அடல் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.636 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைப் பணிகள் நடை பெற்று வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் 536 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை குழாய்கள் அமைத்து, கழிவு நீர்களை 3 சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வரு கிறது. அதன் ஒரு பகுதியாக சர்க்கார் பெரியபாளையத்தில் 36 எம்.எல்.டி. சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு செயல்பாட் டில் உள்ளது. இங்கு நாளொன்றுக்கு மூன்று மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான நீராக திறந்து விடப் படுகிறது. இந்நிலையில் வியாழனன்று மதியம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நெருப்பெரிச்சல் அடுத்த பொம்மநா யக்கன்பாளையம் பகுதியில் சாலைக்கு அடியில் செல்லும் பாதாளச் சாக்கடைக் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இது சாலையைப் பிளந்து கொண்டு கழிவுநீர் பெருக்கெடுத்து வெளியேறியது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது டன், வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் அளிக் கப்பட்டது. சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக விரைந்து வந்து இந்த அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மக்களின் தாகம் தீர்க்க சிபிஎம் நீர் மோர் பந்தல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருமாநல்லூர் கிளைகள் சார்பில் கட்சி அலுவலகம் முன்பு பொதுமக்க ளின் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு பல ஆயிரக்கணக் கானோர் வருகைதந்தனர். திருப்பூரின் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் நடந்து வந்தார்கள். இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருமாநல்லூர் கிளை கள் சார்பில் இரு தினங்களுக்கு நீர் மோர் பந்தல் அமைக்கப் பட்டு பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர்மோர் வழங்கப்பட் டது.
விபத்து சாலையில் வெள்ளை வண்ண எச்சரிக்கை நெடுஞ்சாலைத் துறையினர் தகவல்
திருப்பூர், ஏப்.9 - வஞ்சிபாளையம் சாலை ஜெ.ஜெ நகர் அருகில் குடியிருப் புகள், மருத்துவமனை தொழிற்சாலைகள், பல வணிக நிறுவ னங்கள் உள்ளன. மேலும், இச்சாலை வழியாக தினசரி ஆயி ரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதி யில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதை தடுக்க இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மாநில நெடுஞ்சாலை துறை அலுவல கத்தில் கடந்த மாதம் மனு கொடுத்தனர். இதன் மீது நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நகரக்குழு உறுப்பினர் ப. செல்வி, ரங்கநாதபுரம் கிளை எஸ்.செல்வகுமார் ஆகியோர் மாநில நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளரை சந்தித்து வேகத்தடை அமைக்க கோரி அளித்த மனுவின் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்து கேட்டனர்.அப்பகுதியில் வேகத் தடை அமைப்பதற்கு சாத்தியக்கூறு இல்லை. இருப்பினும் வாகனங்களின் வேகத்தை குறைக்க எச்சரிக்கும் வகையில் சாலையில் வெள்ளை நிற வண்ணம் தீட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி பொறியாளர் தெரிவித்தார்.
ஊழியர்களுக்கெதிராக செயல்படும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கண் டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் செவ்வாயன்று கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.