tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உரிமை காக்க உறுதியேற்போம்

உழைப்பவரின் உரிமை மறுக் கப்படக்கூடாது; உழைப்பாள ரின் உதிரம் உறிஞ்சப்படக்கூடாது; உழை க்கும் கரங்களுக்கு உயர்வு வேண்டும் என்கிற பதாகை உயர்ந்த நாள் இன்று.  உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.
 

கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

அதிமுக ஆட்சியில் லஞ்சம்  ஆணையருக்கு சிறை 

வேலூர், ஏப். 30 - வேலூர் மாநகராட்சியில் 2017ம் ஆண்டு டெங்கு கொசு ஒழிப்பு ஒப்பந்தம் எடுத்திருந்த பாலாஜி ஒரு புகார் அளித் தார். அதில், ஒப்பந்த தொகை 10 லட்சத்து 23 ஆயிரத்தை விடுவிக்க மாநகராட்சி  ஆணையர் குமார் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்றார் என்று புகாரில் குறிப்பிட் டார். ஆகவே,  குமார் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தது டன் அவரை கைது செய்தனர். இதுதொடர் பான வழக்கில், வேலூர் மாநக ராட்சி முன்னாள் ஆணையர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறைமற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து முதன்மை குற்றவியல் நீதித்துறை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை!

சென்னை, ஏப். 30 - கேரளத்தில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதன் எதி ரொலியாக, தமிழ்நாட்டில் தீவிர கண் காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் பேட்டி அளித்துள்ளார். அதில், “இதுவரை தமிழ்நாட்டில் பறவைகளுக்கு இந்த வகை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேசமயம் மனிதர்களுக்கு ஏதாவது பாதிப்பு உள்ளதா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது வரை யாருக்கும் பாதிப்பு கண்டறியப் படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.