சென்னை, ஜூலை 14- அரசு உதவி பெறும் பள்ளிகளி லும் மாணவர்களுக்கு காலைச் சிற் றுண்டி வழங்கும் திட்டத்தை முதல் வர் மு.க. ஸ்டாலின், திங்களன்று (ஜூலை 15) துவங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாண வர்களின் கல்வியை ஊக்குவிக்க வும், ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும், கற்றல் இடைநிற்ற லைத் தவிர்க்கவும் அரசுப் பள்ளி களில் காலை சிற்றுண்டித் திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் 2022 மே 7 அன்று அறிவித்தார்.
அதன்படி காலை உணவுத் திட்டத்தை கடந்த 2022 செப்டம் பர் 15 அன்று அண்ணா பிறந்த நாளில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை யில் துவக்கி வைத்தார். முதற்கட்ட மாக 1,545 துவக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந் தைகள் பயன்பெறும் வகையில் துவங்கப்பட்ட இந்தத் திட்டம், மக்க ளிடம் பேராதரவைப் பெற்ற நிலை யில், 25.8.2023 அன்று கலைஞர் பிறந்த திருக்குவளையில்- 30 ஆயி ரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளி களுக்கு, 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் அள விற்கு விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், 2024-25 நிதி யாண்டிற்கான பட்ஜெட்டின் போது, அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமல் லாது, அரசு உதவி பெறும் தொடக் கப் பள்ளிகளுக்கும் காலை உண வுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இதனடிப்படையில், ஜூலை 15 - காமராஜர் பிறந்த நாளில், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளி லும் காலை உணவுத் திட்டத்தைத் துவங்கி வைக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கடம் பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிரா மத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி யில் நடைபெறும் விழாவில், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டத்தைத் துவங்கி வைக்கிறார்.
இத்திட்டத்தின் மூலம் 3 ஆயி ரத்து 995 அரசு உதவி பெறும் தொடக் கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பய னடைய உள்ளனர்.