tamilnadu

img

தஞ்சையில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி

தஞ்சாவூர் செப்.6- தமிழ்நாடு அறிவியல் இயக்க தஞ்சாவூர் மாவட்டக் கிளை சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை ஜான்பிரிட்டோ கல்வியியல் கல்லூரியில் புத்தகங்களுடன், தேனீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் அருட்தந்தை ஸ்டீபன்ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் முனைவர் வெ.சுகுமாரன், முனைவர் தமிழடியான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கல்லூரி முதல்வர் முனைவர் மேரிகரோலின் வரவேற்றார்.  நிகழ்ச்சியில், பாரதி புத்தகாலயம் நிறுவன வெளியீடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. தொடர்ந்து புத்தக வாசிப்பு மற்றும் நூல்கள் குறித்த விமர்சனம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு தேநீர் விருந்தளித்து கௌரவிக்கப்பட்டனர். பேராசிரியர்கள்  ஞானதிக்கதாஸ், ஆலீஸ் மதுஷீலா, ஜெயா, உமா, அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் நாராயணசாமி, ஒருங்கிணைப்பாளர்  ராம்மனோகர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக தேசிய குழந்தைகள் அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் வீ.ராஜசேகர் நன்றி கூறினார்.