tamilnadu

img

சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி- சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு 

சென்னை மெரினா கடற்கரையில் படகு சேவை தொடங்கப்படும் எனச் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் , சுற்றுலாத்துறை அமைச்சர் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

அதன்படி,சென்னை மெரினா கடற்கரையில் , ராயல் மெட்ராஸ் யாக்ட் உடன் இனைந்து படகு சவாரி தொடங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.மேலும், ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல் சேவை தொடங்குவது பற்றி ஆய்வு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

;