tamilnadu

img

ஆன்லைன் விளையாட்டுக்கு நள்ளிரவில் தடை ஆணையம் பரிந்துரை

சென்னை,செப்.18- தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு களை கட்டுப்படுத்த தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் புதிய பரிந்துரைகளை செய்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிக ரித்ததை தொடர்ந்து தமிழக அரசு இந்த ஆணையத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது.

ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி கட்டுப்படுத்தலாம்? சிறுவர்-சிறுமிகளை அதில் இருந்து எப்படி மீட்டெடுக்கலாம்? என்பது குறித்த ஆலோசனைகளை தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கலாம்.

ஒரு நாளைக்கு 4 மணி  நேரத்திற்கு மேல் விளையாட அனு மதிக்கக் கூடாது. ஒவ்வொரு மாதமும் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே செலுத்தி விளையாடும் வகையில் திருத்தங்களை செய்யலாம். சுமார் 1 லட்சம் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைகள் பலர்  தங்களது பெற்றோர்களின் செல்போன் களையே ஆன்லைன் விளையாட்டுக்காக பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

இப்படி குறிப்பிட்ட நேரம் தான்  விளையாட முடியும் என்பதை கொண்டு வந்து விட்டால் நிச்சயமாக ஆன்லைன் விளையாட்டுகளில் குழந்தைகள் அதிக மாக நேரத்தை செலவழிப்பது குறையும். சீனா, தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருப்பது போன்று விளையாடும் நேரம் மற்றும் பணப் பரிமாற்ற தகவல்களை செல்போன்களுக்கு அனுப்பும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்தா லும் பணம் கட்டாமல் பொழுதுபோக்காக விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு இது பொருந்தாது என்று ஆன்லைன் விளை யாட்டு தடுப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ள னர்.