சென்னை, ஜூன் 27- சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 3 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சரும், சட்டமன்ற அவை முன்னவருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, ஆளுநர், சட்டமன்றம் ஆகிய துறைகள் மீதான விவாதங்களுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசினார். அப்போது, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 3 கோடியில் ரூ. 2 கோடி மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்கள் செலவிட அனுமதி இருந்தது. மீதமுள்ள ரூ. 1 கோடியை அரசு பரிந்துரைக்கும் திட்டத்திற்குச் செலவிட வேண்டும். இனி ரூ. 3 கோடி தொகுதி வளர்ச்சி நிதியையும் எம்எல்ஏ-க்களே நேரடியாக திட்டங்களுக்கு செலவிடலாம்” என்று அவர் கூறினார். சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பொருள் சேவை வரியையும் நீக்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.