tamilnadu

img

ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ‘கூட்டு களவானியாக பாஜக அரசு’

புதுச்சேரி,ஜூலை.27- மத்திய பாஜக அரசு கூட்டு களவானியாக செயல்படுகிறது என்று பிஎஸ்என்எல் ஊழியர்சங்க அகில இந்திய துணை பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா குற்றஞ்சாட்டினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் புதுச்சேரி மாவட்ட 9வது மாநாடு புதுச்சேரியில் நடைபெற்றது. சங்கக் கொடி ஏற்றத்துடன் துவங்கிய மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எஸ்.சங்கரன் தலைமை தாங்கினார். உதவிச் செயலாளர் கலியபெருமாள்வரவேற்றார். “பிஎஸ்என்எல் எதிர்காலமும் நமது கடமையும்” என்ற தலைப்பில் சங்கத்தின் அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா உரையாற்றினார். அப்போது தனது உரையில், “மத்திய பாஜக அரசு பொறுப்பேற்ற திலிருந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க் கும் முடிவை தீவிரப்படுத்தி வருகிறது.  அதன்ஒரு பகுதியாக தான் ரயில்வேத் துறையில்  ரயில் வழித்தடங்களை தனியாருக்கு அனுமதி அளித்திருப்பதையும் தமிழ கத்தின் ஒரு ரயில் நிலையம் உட்பட 50 ரயில் நிலையங்களை தனி யாருக்கு விடும் முடிவையும் எடுத்துள்ள தையும் சுட்டிக்காட்டி னார். பாஜக அரசின் தனியார் மய நடவடிக்கையை பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியிலேயே ரயில்வே ஊழியர்கள் எதிர்ப்பு தெரி வித்து  போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள னர் என்றும் அவர் கூறினார். கடந்த காலங்களில் 31 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டித்தந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சியை ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தோடு மோடி அரசு கூட்டு களவானியாக சேர்ந்து கொண்டு தடுத்தால் தொலைத் தொடர்புத்துறையின் வருமானம் ரூ.18 ஆயிரம் கோடியாக குறைந்து ள்ளது. இதனை ஊழியர்கள் நாட்டுமக்களின் ஆதரவோடு முறியடிப்பார்கள் என்றார். சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதுச்சேரி தலைமை பொதுமேலாளர் ஜெயக்குமார் ஜெயவேல், துணை பொது மேலாளர்கள் ராஜநாயகம், ராதிகா ரவீந்திரன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி யன் வேலைஅறிக்கை வாசித்தார். சங்க நிர்வாகிகள் கொளஞ்சிய ப்பன்,முருகையன் மற்றும் பலர் பேசினர்.