tamilnadu

img

பாஜக மாநில தலைவர் எல். முருகன் மீது திமுக அவதூறு வழக்கு...

சென்னை:
முரசொலி இட விவகாரத்தில் திமுக-வுக்கு எதிராக அவதூறு கருத்துகளை பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்ததாகக் கூறி அவர் மீது திமுக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

முரசொலி இட விவகாரத்தில் திமுக-வுக்கு எதிராக அவதூறு கருத்துகளை பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்ததாகக் கூறி அவர் மீது திமுக அமைப்புச் செயலாளரும், முரசொலி அறக்கட்டளை அறங்காவலருமான ஆர்.எஸ்.பாரதி எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.இதற்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் தாக்கல் செய்த மனுவில், அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததற்காக எல்.முருகனைத் தண்டிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன் றம் ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காக பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு வழக்கைத் தள்ளி வைத்தது.

;