நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரான தேவநாதன் கைது.
மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக முதலீடு பெற்று வாடிக்கையாளர்களை ஏமாற்றிய புகாரில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் 525 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடத்தி வரும் தேவநாதன் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக தேவநாதன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.