tamilnadu

img

பாக்யராஜ் பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு - மகளிர் ஆணையம் சம்மன்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குநர் பாக்யராஜுக்கு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
சமீபத்தில் நடந்த கருத்துகளை பதிவு செய் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சில இளைஞர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டார்கள் . என்னை பொறுத்தவரை இளைஞர்களிடம் மட்டுமல்ல, அந்தப் பெண்களிடமும் தவறு இருக்கிறது. 
ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்று கூறிய பாக்யராஜ் பெண்களும் சிந்தித்து செயல்பட வேண்டும். ஆண் தவறான நடத்தையுடன் இருந்தாலும் முதல் மனைவிக்கு குறை வைப்பதில்லை, ஆனால் பெண் கள்ளக் காதலனுடன் இருந்தால் அவளது கணவன் கொலை செய்யப்படுகிறான்” என்று பேசியிருந்தார்.
இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி வாசி ரெட்டி பத்மா கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ஒரு சில சம்பவங்களை வைத்து ஒட்டு மொத்த பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பாக்யராஜ் பேசியிருப்பதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி கண்ணகி பாக்கியநாதன் டிசம்பர் 2ம் தேதி நடிகர் பாக்யராஜ் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி உள்ளார்.