tamilnadu

img

சென்னை: கந்து வட்டி கொடுமையால் இளைஞர் தற்கொலை

சென்னையில் கந்து வட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை மணலி அடுத்த மாத்தூரில் கந்துவட்டி கொடுமையால் விஜய் (19) என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய தேவராஜ், பேபி ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளைஞர் விஜய் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


;