tamilnadu

அக்கரை - மாமல்லபுரம் இடையே உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு

சென்னை, ஜூன் 12-   நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி களில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது வழக்கம். ஏப்ரல் மாதத்தில் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டண உயர்வு தேர்தல் காரணமாக அமல்படுத்தப்படாமல் இருந்தது.  

இதையடுத்து தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கட்டண உயர்வானது அமலுக்கு வந்தது. இந்நிலையில், அக்கரை மற்றும் மாமல்லபுரம் இடையே உள்ள சுங்கசாவடி யில் புதனன்று நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

இந்த கட்டண உயர்வானது அடுத்தாண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கார், ஜீப்  உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.1 முதல் ரூ. 68 வரையும், இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ. 2 முதல் ரூ. 110 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை-மாமல்லபுரம் இடையே போக்குவரத்து அதிகரித்ததால் 2018ம் ஆண்டு அக்கரை-மாமல்லபுரம் இடையே யான சாலை 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.