ஊத்துக்கோட்டை ஏரிக்கரையில் பீடி சுற்றும் தொழிலில் பல தலைமுறையாக சிறுபான்மை சமுகத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். பல முறை மனு கொடுத்தும் இங்கு வசிக்கும் 41 குடும்பங்களுக்கு அதிகாரிகள் குடிமனை பட்டா வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர். குடிசைகளில் வாழும் தங்களுக்கு அரசே இலவச குடிமனை பட்டா வழங்கி, பசுமை வீடுகளை கட்டித்தர வேண்டும் என ஊத்துக்கோட்டையில் வெள்ளியன்று (ஜூன் 7) நடைபெற்ற ஜமாபந்தியில் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். செங்கை மாவட்ட பீடி தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டச் செயலாளர் கே.முருகன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தினர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் பரிசீலிப்பதாகக் கூறினர்.