tamilnadu

img

காய்கறிகளுக்கு அடிப்படை விலை- கேரளா போல் தமிழகத்திலும் நிறைவேற்றுக: மு.க.ஸ்டாலின்....

சென்னை:
கேரளா போல் காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்யும் சட்டத்தை தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டுவர வேண்டும் எனதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

திங்களன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:மத்திய பா.ஜ.க. அரசு, எதிர்ப்புகளுக் கிடையேயும் நிறைவேற்றி இருக்கும்மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வில் காரிருள் சூழ  வைத்துள்ளது. இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட வுடன் பருப்பு விலை 25 முதல் 60 ரூபாய் வரை உயர்ந்தது. சமையல் எண்ணெய் விலை  உயர்ந்து - இன்றும் தொடருகிறது. வெங்காய விலையோ கிலோ 100 முதல் 160 ரூபாய் வரை உயர்ந்து ஏழை - எளிய,நடுத்தர மக்களைக் கண்ணீர் சிந்த வைத்தது. பிறகு வெங்காய விலை இறங்குமுகமாகி - இப்போது உருளைக்கிழங்கு விலை ஏறுமுகமாகிவிட்டது. ஒரு கிலோவிற்கு 25 முதல் 60 ரூபாய் வரை அதிகரித்து - இன்றைக்கு உருளைக்கிழங்கையும் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியச் சந்தை வந்து விட்டது. வெங்காயம், சமையல் எண்ணெய், பருப்பு, உருளைக் கிழங்கு, காய்கறிகள் என அனைத்துப் பொருட்களும், இந்த மூன்று சட்டங்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 15-ஆம் தேதிக்குப் பிறகு பெருமளவில் பதுக்கப்பட்டுள்ளன. மக்களுக்குத் தாராளமாகக் கிடைப்பது செயற்கையாகத் தடுக்கப்பட்டு விட்டது. விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டு - தீபாவளிப் பண்டிகை நேரத்தில் இடைத்தரகர்களால் விலை ஏற்றம்  உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளைப் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி ஆதரவளித்து விட்டு,  இன்றைக்கு “போலி விவசாயி” வேடம் தரித்து, போராளிகளான விவசாயிகளின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துகிறார்.கேரள மாநில அரசு சமீபத்தில் வரவேற்கத்தக்கச் சட்டம் ஒன்றை - இந்தியாவிலேயே முதல் முறையாகக் கொண்டு வந்து - காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயித்துள்ளது. 16 வகை காய்கறிகளுக்கு விவசாயிகளின் உற்பத்தி விலையில் இருந்து 20 சதவீதம் அதிகம் கொடுக்க வேண்டும் என்றும் - இந்த காய்கறிகளின் சந்தை விலை குறைவாக இருந்தால் கூட இந்த அடிப்படை விலை கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சட்டத்தில் உறுதி செய்திருக்கிறது.  விவசாயிகள் வாழ்வில் விளக்கேற்றும் அந்தச் சட்டம் தமிழ்நாட்டிலும் நிறை வேற்றப்பட வேண்டும்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.