சென்னை, ஜூன் 8- சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் 1315 மாநகர பேருந்துகளின் கீழ் இருபுற பக்கவாட்டிலும் தடுப்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 600க்கும் மேற்பட்ட வழித் தடங்களில் 3,000க்கும் அதிகமான பேருந்து கள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் ஒவ்வொன்றும் தினசரி 265 முதல் 270 கி.மீ. தூரம் வரை பயணிக்கிறது.
இந்த பேருந்து களில் தினசரி சுமார் 35 லட்சத்திற்கும் அதிக மான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த பேருந்துகளால் ஏற்படும் விபத்து களை தடுக்கும் நடவடிக்கைகளில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் இறங்கி யுள்ளது. குறிப்பாக பேருந்துகளை முன்னெச்சரிக்கையுடன் இயக்குவது தொடர்பாக ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குவது,
பயிற்சி வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேருந்துகளுக்கு அருகில் வரும் இருசக்கர வாகன ஓட்டி கள் நிலை தடுமாறி பேருந்து சக்கரங்க ளில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் விதமாக பேருந்துகளுக்கு இருபுறமும் கீழ் பக்க வாட்டில் தடுப்பு கம்பிகள் அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது 675 பேருந்து களில் இந்த தடுப்பு கம்பிகள் அமைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, அரசு பேருந்து சக்கரங்களுக்கிடையே விபத்து தடுப்பு கம்பிகளை அமைப்பதன் மூலம் மாநகர பேருந்துகளின் பாதுகாப்பு அம்சங் களை மேம்படுத்தி வருகிறோம். இந்த நடவடிக்கை மூலம் இருசக்கர வாகன ஓட்டி கள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறோம். இருசக்கர வாகன ஓட்டிகள் பேருந்து செல்லும் போது அல்லது எதிர்பாராத விதமாக பேருந்துக்கு அடியில் சிக்கி விபத்துக்குள்ளாவதை தடுக்கும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக 2,212 பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் முதற்கட்டமாக 600 பேருந்துகளிலும், இரண்டாம் கட்டமாக 715 பேருந்துகளிலும் இந்த தடுப்பு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு எங்களது முதல் குறிக்கோள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.