tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ரூ.83.19 கோடியில் 8 மாவட்டங்களில்  தடுப்பணைகள், புதிய அலுவலகங்கள் திறப்பு

சென்னை, அக். 4- தமிழக நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் 83 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், புனரமைக்கப்பட்ட வாய்க்கால்கள், அணை மறுகட்டுமானப் பணி, புதிய குளம், புதிய அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட 19 நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 4 அன்று  தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கவுண்டையன்வலசு கிராமம் அருகில் அமராவதி ஆற்றின் குறுக்கே 11 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ள தடுப்பணை, தாராபுரம் வட்டம், மாம்பாடி-புங்கந்துறை கிராமம் அமராவதி ஆற்றில் 11 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை,  காஞ்சிபுரம் மாவட்டம், கொளப்பாக்கம் கிராமத்தில் 11 கோடியே 72 லட்சம்  ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூடிய வடிவிலான கால்வாய், 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் 4 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்ட அய்யம்பாளையம் ராஜவாய்க்கால், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கஸ்தூரிரெங்கபுரம் கிராமம் பகுதி 2-இல் 4 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளம் என மொத்தம் 83 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் நீர்வளத்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட 19 திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

500 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை 

சென்னை,அக்.4- கல்வி உதவித்தொகையாக 500 மாணவர்களுக்கு ரூ.50 லட்சத்திற்கான வங்கி வரைவோலைகளை தலைமைச் செயலகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2024 – 2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், “ஒருகால பூசைத் திட்ட கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் நலன் கருதி, இவ்வாண்டு 500 மாணவர்களுக்கு மேற்படிப்பிற்காக தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்காக பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி மேம்பாட்டு மைய நிதி மூலம் கல்வி உதவித் தொகையினை 500 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று வழங்கினார்.

சூலூர் அருகே ராணுவ தொழிற்பூங்கா

கோவை,அக்.4- கோவை சூலூர் அருகே ரூ.260 கோடியில் அமைய உள்ள ராணுவ தொழிற்பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சூலூர் வாரப்பட்டி ஊராட்சியில் 370 ஏக்கரில் அமையும் ராணுவ தொழிற்பூங்காவுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இந்த தொழிற்பூங்கா மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். ராணுவ தொழில் பூங்கா அமைக்கும் பணிகளை டிட்கோ  நிறுவனம் தொடங்கி உள்ளது. இதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கு அமைக்கப்படும் ராணுவ தொழில் பூங்காவில் விமானங்களை பழுது நீக்கவும் விமானங்களை பராமரித்து இயக்கி பார்க்கவும் பெரிய அளவில் விமான தளம் அமைக்கப்பட உள்ளது.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

சென்னை,அக்.4- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம் பர் மாதத்தில் 4 நாட்கள்  சிறப்பு முகாம் நடைபெற உள் ளது என்று தேர்தல் ஆணை யம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தலை மை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் களுக்கு கடிதம் எழுதியுள் ளார். அதில், நவம்பர் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப் படும். வரும் ஜன.1, 2025 அன்று 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக் காளர் அட்டைக்கு விண்ணப் பிக்கலாம். புகைப்படத்து டன் கூடிய வாக்காளர் பட்டி யல் திருத்தப் பணி நடை பெற உள்ளது. தேவையான அளவு படிவங்களை வைத் திருக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொசு ஒழிப்பு பணிக்காக   100 புகை பரப்பும் இயந்திரங்கள்

சென்னை,அக்.4- தமிழக நகராட்சி நிர் வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மழைக்காலங்களில் தேவையான மருந்துகள் கை யிருப்பில் உள்ளன. அவசர பணிகள் தவிர மற்ற சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொசுக் களால் பரவும் நோய்களை  தடுக்க தற்காலிக பணி யாளர்கள். கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ.  67 லட்சம் மதிப்பில் கூடுதலாக கையினால் இயக்கும் 100 புகைபரப்பும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ் வாறு அவர் தெரிவித்தார்.