tamilnadu

img

வங்கிக் கடன் தொல்லை: விவசாயிகளை பாதுகாக்க கோரிக்கை

கடலூர், ஆக. 6- வங்கி கடன் தொல்லையில் இருந்து விவ சாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி கட லூர் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப் பட்டது.  பண்ருட்டி வட்டம் மேல்மாம்பட்டு கிரா மத்தைச் சேர்ந்த விவசாயிகள் 93 பேர் பண்ருட்டியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி யில் 2014ஆம் ஆண்டு பயிர்க்கடன் பெற்றுள்ள னர். இயற்கை சீற்றங்களால் பலமுறை பாதிக்  கப்பட்டதால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இந்நிலையில் பண்ருட்டி மக்கள் நீதி மன்றம் 17.8.2018இல் விவசாயிகளை நேரில்  அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது எங்கள் நிலைமையை ஏற்றுக்கொண்டு வட்டியை தள்ளுபடி செய்து, அசல் தொகை யில் 40 விழுக்காட்டை கழித்து 60 விழுக்காடு தொகையை செலுத்தச் சொன்னார்கள். ஆனால் விவசாயிகள்  தரப்பில் 50 விழுக்காடு  தொகையை கழித்து, விடுங்கள் மீதமுள்ள  50 விழுக்காடு தொகையை செலுத்துகி றோம் என தெரிவித்தோம். அதை  வங்கி  ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் 12.7.2019 இல் மீண்டும் எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியபோது, வட்டி தள்ளுபடி  போக அசல் தொகையில் 10 விழுக்காடு தான் தள்ளுபடி செய்ய முடியும் மீதித் தொகையை செலுத்த வேண்டும் எனக் கூறி னார்கள். இதை விவசாயிகள் ஏற்றுக் கொள்ள வில்லை. தற்போது விவசாயிகள் மறுபடியும் பயிர்  செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.   எனவே கடன் தொகையில் 50 விழுக்காடு தொகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேல்மாம்பட்டு விவசாயி சிங்காரவேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்  தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், செயலாளர் ஜி.மாதவன்,  பொருளாளர் எஸ்.தட்சிணா மூர்த்தி ஆகியோர் தலைமையில் விவசாயி கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.