போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி
, ஜூன் 23- பள்ளி மாணவர்களிடையே போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக எம்.கே.பி. நகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட எம்.கே.பி. நகர காவல் நிலையம், கொடுங்கையூர் காவல் நிலையம், வியாசர்பாடி போக்குவரத்து காவல் துறையினர் விவேகானந்தா பள்ளி மாணவர்களுடன் இணைந்து போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்பு ணர்வு சைக்கிள் பேரணி நடத்தினர். இதில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதை பயன்படுத்தினால் உடலுக்குள் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காவல் துறையினர் எடுத்துரைத்தனர்.
மேலும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை சைக்கி ளில் ஏந்தியபடி காவல்துறையினருடன் இணைந்து மாண வர்களும் ஊர்வலமாகச் சென்றனர். எம்கேபி நகர் காவல் நிலையம் அருகே தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி மீனாம்பாள் சாலை, எம்.ஆர். நகர் சந்திப்பு, எருக்கஞ்சேரி வழியாக மீண்டும் எம்கேபி நகர் காவல் நிலை யம் அருகே வந்து முடிந்தது.
புதுச்சேரி மகளிர் ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி, ஜூன் 23- புதுச்சேரி மகளிர் ஆணைய தலைவர் பதவிக்கு ஜூலை 15 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் முத்து மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது:-
புதுச்சேரி மகளிர் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு, புதுவையை சேர்ந்த தகுதி வாய்ந்த, பிரச்சனைகளுக்கு உள்ளான பெண்களை பாதுகாப்பதி லும், முன்னேற்று வதிலும் ஆர்வம், அனுபவம், திறமை மிக்க பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது.
தலைவர் பதவிக்கு 60 வயதுக்கு உட்பட்டவர்களும், 6 உறுப்பினர் பதவிக்கு 60 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான தகுதி, விதி முறைகள், நிபந்தனைகள் அரசு இணையதளத்தில் கொடுக்க ப்பட்டுள்ளது. 6 உறுப்பினர்களில் தலா ஒருவர் பட்டியல், பழங்குடி இனத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தகுதி தகுதி சான்றிதழ் களுடன் இணைத்து ஜூலை 15-ந் தேதிக்குள் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.