tamilnadu

img

ஆவடி அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் பிரேத பரிசோதனைக் கூடம்

அம்பத்தூர், அக். 14- அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற் பேட்டை, ஆவடி, பட்டா பிராம், முத்தா புதுப்பேட்டை, திருநின்றவூர், ஆவடி டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயல்  ஆகிய இடங்களில் காவல் நிலையங்கள் உள்ளன. மேற்கண்ட காவல் நிலைய பகுதிகளில் நடைபெறும் இயற்கை மரணங்களுக்கு பிரேத பரிசோதனை செய்ய அவசியம் இல்லை. ஆனால் கொலை, தற்கொலை. விபத்தினால் மரணம் ஆகிய வற்றிற்கு பிரேத பரி சோதனை செய்து இறப்பிற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்பது சட்டமாகும்.  அந்த வகையில் மேற்கண்ட காவல் நிலைய பகுதியில் செயற்கையான முறையில் நடைபெறும் மரணத்திற்கு பிரேத பரி சோதனை செய்ய வேண்டு மானால் திருவள்ளூர், கீழ்ப்பாக்கம், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவ மனை களுக்குதான் செல்ல  வேண்டும். இதனை தவிர்க்க ஆவடி அரசு பொது மருத்துவ மனையில் பிரேத பரிசோ தனை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.  இதையடுத்து ஆவடி அரசு மருத்துவமனையில் ரூ. 30 லட்சம் செலவில் பிரேத பரிசோதனைக் கூடம் கட்டப்பட்டது. இதனை 2018 ஆம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது. பிறகு இங்கு 9 சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்ப ட்டது.  இந்நிலையில், ஊழியர்க ளுக்கு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கடந்த 4 மாதங்களாக பிரேத பரி சோதனைக் கூடம் செயல்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால் மீண்டும் சடலங்களை பிரேத பரிசோதனை செய்ய சென்னை, திருவள்ளூ ருக்கு அலைய வேண்டி யுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,‘ திருவள்ளூர் அரசு மருத்தவ மனையில் இருப்பதைப் போன்று இரு சடலங்கள் வைக்கும் வகையில் குளிர்சாதனப் பெட்டி ஆவடி பிரேத பரிசோதனைக் கூடத்தில் உள்ளது. மேலும், ஒரே நேரத்தில் இரு சடலங்க ளுக்கு மேல் வந்தால் சேமித்து வைக்க குளிர் சாதன பெட்டியில் இடம் இல்லை.அதோடு மட்டு மல்லாமல் மின்சாரம் தடைபட்டால் ஜெனரேட்டர் வசதியில்லாததால் சடலங்கங்களை குளிரூட்ட முடியாது. இதனால் ஆவடி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்திற்கு ஜெனரேட்டர். அதிக சடலங்களை சேமிக்க குளிர்சாதனப் பெட்டிகள் வசதி செய்ய அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ள னர்.