சென்னை, பிப். 5- ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் கடலூ ரில் இருந்து சென்னை வரை சுமார் 165 கி.மீ. கடலில் நீந்தி உலக சாதனை படைத்துள்ள னர். ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிப்ரவரி 1ஆம் தேதி 14 குழந்தை கள் 165 கி.மீ. கடலில் நீந்தத் தொடங்கினர்.
நான்கு நாட்கள் ரிலே முறையில் நடந்த இந்த சாதனைக்கான நிறைவு விழா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர் மேகநாத ரெட்டி, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளை பாராட்டினர்.
இதனை தொடர்ந்து ‘WORLD RECORD OF UNION’ என்னும் அமைப்பு குழந்தை களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கியது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர பாபு, மற்ற குழந்தை களை போல் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளா லும் சாதனை படைக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என தெரிவித்தார்.