சென்னை, மே 31-தமிழக காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை விசாரிக்க தனியாக உருவாக்கப் பட்ட பிரிவிற்கு 41 கூடுதல் கண்காணிப்பாளர்களை நியமித்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருவதையடுத்து இதற்கென தனி விசாரணைப் பிரிவு உருவாக்கப் பட்டது. இந்த பிரிவின் உயர் அதிகாரியாக கூடுதல் டிஜிபி அருணாச்சலம் நியமிக்கப்பட்டார்.தற்போது ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநகர காவல் துறையில் தனித்தனியாக கூடுதல் கண்காணிப்பாளர்கள் பதவிக்கு நிகராக 41 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய புலனாய்வு பிரிவு, இண்டர்போல் உள்ளிட்ட துறைகளிடம் நேரடியாக இணைந்து விசாரிக்கும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.