சென்னை, ஆக 4- மதிமுக-வின் 30-ஆவது பொதுக்குழு ஞாயிற்றுக்கிழ மை (ஆக.4) சென்னை அண்ணாநகரில், அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூன ராஜ் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செய லாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு.செந்தி லதிபன், முதன்மைச் செய லாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச் செயலா ளர்கள் மல்லை சி.ஏ. சத்யா, செஞ்சி ஏ.கே.மணி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு முற்றாக புறக் கணிக்க பட்டதற்கு பொதுக் குழு கூட்டத்தில் கடும் கண்ட னம் தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வில் தொடர் மோச டிகள், முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த நிலை யில், நீட் தேர்வு ஒட்டுமொத்த மாக ரத்து செய்யப்பட வேண்டும். தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும்; கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், பாஜக அரசின் வரவு செலவு திட்ட அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது மற்றும் பேரிடர் நிவாரண நிதி யாக 37 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முத லமைச்சர் முன்வைத்த கோரிக்கையை ஒன்றிய அரசு அலட்சியப்படுத்தி யதைக் கண்டித்தும்,, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கோரியும் மதிமுக சார்பில் ஆகஸ்ட் 14 காலை 10 மணிக்கு வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது.