சென்னை, நவ. 4 - மகளிர் உதவி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று தவறுதலாக குறிப்பிடப்பட்ட விளம்பரம் வெளியாகி இருப்பதாக தமிழக அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார்.
மகளிர் உதவி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, அழைப்பை ஏற்பவர் பணியிடத்துக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற விளம்பரம் வெளியானது பெரும் சர்ச்சையான நிலையில், இந்த விளக்கம்வந்துள்ளது.
இதுதொடர்பாக, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மேலும் தெரிவித்திருப்பதாவது:
“சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் இயங்கும், சமூக நல ஆணையரகம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகும் மகளிருக்கு உதவிட பெண்களுக்கான கட்டுப் பாட்டு மையம், “மகளிர் உதவி எண்.181” சென்னையில் செயல்பட்டு வருகிறது. மகளிர் உதவி எண்.181 பணியிடத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெற்றிட tn.gov.in என்ற இணைய தளத்தில் ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பு, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதில் ‘அழைப்பு ஏற்பாளர்’ (Call Responders) என்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறு தலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த ஆட்சேர்ப்புக்கான அறிக்கை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்த வுடன், அந்த விளம்பரம் உடனடி யாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கி லம் தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்க லாம் என்று திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பு உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது
மேலும், தவறுதலான விளம் பரத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடி யாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாய் மொழியாம் தமிழ் மொழியை உயிருக்கும் மேலாய் மதிக்கும் முதல்வரின் ஆட்சியில், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. பொது வாக நீதிமன்றம், ஒன்றிய அரசுட னான கடிதப் போக்குவரத்து போன்ற வற்றிற்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலை யில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரி தாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம்எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இத னால் மக்கள் ஏமாறப்போவதில்லை.”
இவ்வாறு கீதா ஜீவன் தெரி வித்துள்ளார்