tamilnadu

img

அரக்கோணம் ஐ.என்.எஸ் ராஜாளியில் பெண் உட்பட 21 ஹெலிகாப்டர் பைலட்டுகளுக்கு பயிற்சி நிறைவு விழா

அரக்கோணம், ஜூன் 7-  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ். ராஜாளி  இந்திய கடற்படை விமானதளம் மற்றும் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி அமைந்துள்ளது. 

இங்கு பல்வேறு மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்படும் பைலட்டுகளுக்கு ஹெலிகாப்டர் இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 102 வது ஹெலிகாப்டர் பைலட்டுகளுக்கான பயிற்சி நிறைவு விழா வியாழனன்று (ஜூன்7) நடைபெற்றது.

இதில் கிழக்கு பிராந்திய தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் பங்கேற்றார். உடன் அரக்கோணம் ஐ.என்.எஸ் கடற்படை விமான தள கமோடர் கபில்மேத்தா மற்றும் அதிகாரிகள், அலு வலர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர் திறந்த ஜீப்பில் சென்று வீரர்க ளின் அணிவகுப்பு மரியாதையை  ஏற்றுக்கொண்டார்.

ஹெலிகாப்டர் பைலட்டுகளுக்கு 22 வார கடின பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பயிற்சி யில் சிறந்து விளங்கிய ஹெலிகாப்டர் பைலட்டுகளுக்கு வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.  

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் இதுவரை 849 ஹெலிகாப்டர் பைலட்டுகள் பயிற்சி நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு முதல்முறையாக ஒரு பெண் விமானி பயிற்சி முடித்துள்ளார்.