அசோக் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம் வடசென்னை மாவட்ட குழு சார்பாக ராயபுரம் தங்கசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட துணை செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சரவணத்தமிழன் மாவட்டப் பொருளாளர் மஞ்சுளா, மாவட்ட துணை செயலாளர் விஜய் ஆகியோர் பேசினர். ராயபுரம் பகுதி செயலாளர் அழகு பாண்டி, தலைவர் நீதிதேவன், பொருளாளர் ஜூஹைப் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
நெல்லையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தச்சூர் கூட்டுச்சாலையில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ். தேவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாலிபர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலைக்கு காரனமவர்களை உடனடியாக கைது செய்திட வலியுறுத்தி வாலிபர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டக் குழு சார்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தலைவர் மபா. நந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் க.புருசோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.