tamilnadu

img

அசோக் படுகொலை அரசியல் இயக்கங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்: ஆர்.நல்லக்கண்ணு

சென்னை, ஜூலை 8- அசோக் படுகொலை அரசி யல் இயக்கங்களுக்கு விடுக்கப்  பட்டுள்ள சவால் என ஆர்.நல்லக்  கண்ணு கூறினார். சாதிய, மதவாத சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக்கிற்கு நவபோதி பண்பாட்டு மையம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் சென்னை பெரியார் திட லில் நவபோதி வி.முருகன் கண்ணன் தலைமையில் ஞாயி றன்று (ஜூலை 7) நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்  கண்ணு பேசியதாவது, அசோக் படுகொலை என்பது இந்த சமூ கத்திற்கு விடப்பட்டுள்ள எச்ச ரிக்கை. கம்யூனிஸ்டுகளை சாதி கெட்டவன் என்று கூறுவார்கள்.  அதற்கு காரணம் கம்யூனிஸ்டு களுக்கு சாதி, மதம் கிடையாது.  இதனாலேயே கூட கம்யூனிஸ்ட் கட்சிக்கு சாதி வெறியர்கள், ஆதிக்க சாதியினர் வாக்களிக்க மாட்டார்கள். பாஜகவின் அடித்தளமாக இருப்பது சாதி. சாதி வெறியர்க ளின் உச்சம்தான் அசோக்கின் 50 வயதான தாயார் தாக்கப்பட்ட  சம்பவம், அசோக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.  ஒரு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக இருப்ப வர் 3 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்பது நியதி.  ஆனால் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர் என்றால் அவர் அந்த காவல் நிலையத்திலேயே தொடர்ந்து நீடிப்பார். அப்படி  நீடிப்பவர் ஆதிக்க சாதியைச்  சேர்ந்தவராக இருந்தால் பிற்ப டுத்தப்பட்ட, பழங்குடியின, தலித் மக்களுக்கு எதிராக செயல் படுவார். கொலைகளுக்கு ஆதரவாகவும் இருப்பார்கள். சாதி பேசி அரசியல் செய்ப வர்களை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். மக்களி டத்தில் அவர்களின் பித்தலாட்  டங்களை அம்பலப்படுத்த வேண்டும். ஆணவப் படுகொ லைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அ.சவுந்தரராசன் அப்போது சட்டப் பேரவையில் வலியுறுத்திய போது, அப்போது அமைச்சராக இருந்த ஒ.பன்னீர் செல்வம் தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளே நடப்பதில்லை என்றும் அந்த கொலைகளெல்லாம் தனி நபர் மோதல் என்றும் கூறினார். எல்  லோரும் தமிழர்கள் என்று கூறு கிறார்கள். ஆனால் சாதி பார்த்து தான் பெண் கொடுக்கிறார்கள். அசோக் படுகொலை அரசியல்  இயக்கங்களுக்கு விடுக்கப் பட்டுள்ள சவால். இப்படிப்பட்ட படுகொலைகளுக்கு எதிராக பெரிய இயக்கத்தை உரு வாக்கி போராட வேண்டும் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர், ஜி.செல்வா, பத்திரி கையாளர் அ.குமரேசன், ஆளுர்  ஷாநவாஸ் (விசிக), இயக்கு நர்கள் தாமிரா, லெனின் பாரதி, எழுத்தாளர்கள் மதிவண்ணன், மகிழ்நன், பேராசிரியர் லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். முன்னதாக அசோக் படு கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து  உரிய தண்டனை வழங்க  வேண்டும். தென் மாவட்டங் களில் நடைபெறும் கொலை கள் குறித்து புலனாய்வு குழு  அமைத்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.