சென்னை, ஜூலை 12 - கூலிக்குக் கொலை செய்யும் கும்பல்களையும் அவர்களுக்கு அரசியல் புகலிடம் கொடுப்பவர் களையும், தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, சிதம்பரம் தொகுதி எம்.பி.யும் விசிக தலைவருமான தொல். திருமாவளவன் வெள்ளிக் கிழமை (ஜூலை 12) தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார். பின்னர், இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கிப் பேசினார். அதில் அவர் கூறிய தாவது:
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என சில அரசியல் கட்சிகள், சில அமைப்பு கள் திட்டமிட்டு செயல்பட்டு வரு கின்றன. குறிப்பாக, பாஜகவுக்கு இந்த செயல்திட்டம் இருப்பதை அறிய முடிகிறது.
சிபிஐ விசாரணை கேட்ட பாஜக
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கூட அரசியல் செயல்திட்டம் இருப்பதாக விசிக சந்தேகிக்கிறது. அவர் உயிரிழந்த சில நிமிடங் களில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தான் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் வைத்த கோரிக்கை தான் சிபிஐ விசாரணை. காவல்துறை நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாகவே, பகுஜன் சமாஜ் கோரிக்கை வைக்கும் முன்ன தாகவே தமிழக அரசு விசாரிக்கக் கூடாது, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பது பாஜக வின் குரலாக இருந்தது. அதுவே பாஜக மாநிலத் தலைவரின் குரலாகவும் அடுத்து ஒலித்தது.
ஆருத்ரா கோல்டு விவ காரத்தில் பாஜகவிற்கு தொடர்புண்டு என்று ஒரு வருடமாக பேசப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் வழக்கிலும் ஆருத்ரா வழக்கு தொடர்புபடுத்தி பேசப்படுகிறது. ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பாஜக வில் பொறுப்பிலேயே இருக் கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை யில் பாஜக வலிந்து தலையிட்டு சிபிஐ விசாரணை கோருகிறது.
பதற்றம் ஏற்படுத்துவதே திட்டம்
பாஜகவின் அரசியல் செயல்திட்டம் என்பது திமுக அர சுக்கு எதிராக இங்கு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. அதற்குத் துணையாக பல அமைப்புகள் இங்கு செயல்பட்டு வருவதை காண முடிகிறது.
முன்னாள் முதல்வர் கருணா நிதியை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அரசியல் அநாக ரிகத்தின் உச்சமாக இருக்கிறது. தனிப்பட்ட அல்லது அரசியல் விமர்சனங்களை நாகரிகமாக வைக்கலாம். ஆனால் அவரை கொச்சைப்படுத்துவதன் மூலம் மேலும் பதற்றத்தை உருவாக்கு வதே அவர்கள் நோக்கம் என்பதை உணர முடிகிறது.
எனவே, ஒட்டுமொத்தமாக அர சியல் திட்டங்களை வரை யறுத்துக் கொண்டு சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைக்க சில சக்திகள் செயல்பட்டு வருவதை அறிந்து, சட்டம் - ஒழுங்கைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யிருக்கிறோம். சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைப்போருக்கு அடைக்கலம் தருவோரை கண் காணித்து, அவர்கள் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளோம். இது தொடர்பாக காவல் ஆணை யர் அருணைச் சந்தித்து நேர்மை யான முறையில் விசாரணை நடத்த வலியுறுத்தினோம். எனவே, ஆருத்ரா கோல்டு, பாஜக, ஆம்ஸ்ட்ராங் கொலை மூன்றிலும் உள்ள முக்கோணத் தொடர்பு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்”.
இவ்வாறு தொல். திருமாவளன் கூறினார்.
பேட்டியின் போது விசிக துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ். பாலாஜி எம்எல்ஏ, வன்னி யரசு ஆகியோர் உடனிருந்தனர்.