தொடக்கப் பள்ளிகளிலும் கலைத் திருவிழா
சென்னை, ஜூன் 24- தமிழ்நாடு சட் டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, 25 புதிய அறிவிப்புகளை வெளி யிட்டார்.
அப்போது, “தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களின் கலைத் திறனை வெளிப் படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தக் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் பயி லும் மாணவர்களும் பங்கேற்கும் வகை யில் கலைத் திருவிழா நடத்தப்படும்.
அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் எவ்வித இடர்பாடும் இல்லாமல் தொட ர்ந்து பள்ளிகளுக்கு வருவதை உறு திப்படுத்த உடல் ரீதியாகவும், மன ரீதி யாகவும், சமூக ரீதியாகவும் ஏற்படும் இடையூறுகளில் இருந்து தங்களை பாது காத்துக் கொள்ளவும், இணையதள பயன்பாடுகள் பாதுகாப்பாக கையாள் வது குறித்தும் வழிகாட்டுதல் வழங்க ஆசிரியர்களைக் கொண்ட குழுக்கள் அமைத்து அகல் விளக்கு என்னும் திட் டம் செயல்படுத்தப்படும்” என்று அமைச் சர் கூறினார்.
கூட்டத்தைப் புறக்கணித்த அதிமுக எம்எல்ஏக்கள்
சென்னை, ஜூன் 24- கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவ காரத்தை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலை மையில் அதிமுக உறுப்பினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கருப்புச் சட்டை அணிந்து வந்து சட்டப்பேரவையில் அம ளியில் ஈடுபட்டனர். சனிக்கிழமை யன்றும் சட்டமன்றக் கூட்டம் தொடங்கி யதும் கேள்வி நேரத்தை நடத்த விடா மல் இரண்டாவது நாளாக பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். பிறகு கூட்டத் தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்த னர். இந்நிலையில், திங்கட்கிழமை கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தி யதால் அதிமுக உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக சட்டமன்ற பேரவை கூட் டத்தை புறக்கணித்தனர்.
திருவண்ணாமலையில் ரூ.36 கோடியில் பணிகள்
சென்னை, ஜூன் 24- தமிழ்நாடு சட்டப் பேரவையில் திங்க ளன்று (ஜூன் 24) கேள்வி நேரத்தின் போது எழுப்பப் பட்ட கேள்விக்கு பதி லளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேசினார். அப்போது, “திரு வண்ணாமலை கோவிலுக்காக முதற் கட்ட மாஸ்டர் பிளான் திட்டத்திற்காக ரூ. 36.41 கோடியில் ஒப்பந்தம் கோரப் பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை கோவிலுக்கு ஆந் திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பவுர்ணமி நாளில் 30 லட்சத்துக்கும் மேற் பட்டோர் வருகை தருகின்றனர். பக் தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த 2வது மாஸ்டர் பிளான் விரைவில் தயார் செய்யப்படும்” என்றார்.
அதேபோல், “கோவில் தங்கங்களை உருக்கும் பணி மூலம் கோவில் தங்கங் கள் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு ரூ. 5.74 கோடி வைப்பு நிதி வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளது. தங்கக் கட்டிகள் வைப்பு நிதி மூலம் கிடைக்கும் வருவாய் 14 கோயில்களுக்கு பயன்படுத் தப்பட்டு வருகிறது” என்றும் தெரிவித்தார்.
சுற்றுலா பகுதியாகும் கல்வராயன் மலை
சென்னை, ஜூன் 24- கேள்வி நேரத் தின் போது, துணைக் கேள்வி எழுப்பிய கொ.ம.தே.க. தலை வர் ஈ.ஆர். ஈஸ்வரன், “கல்வராயன் மலையை கள்ளச் சாராய மலை என்று அழைக்கும் நிலை உள்ளது. அந்த நிலையை மாற்றி மக் கள் பயணிக்கின்ற, பயன்படுத்துகின்ற சுற்றுலா தலமாக மாற்றினால் கள்ளச் சாராயம் போன்ற விஷயங்கள் தடுக்கப் படும். எனவே, கல்வராயன் மலையை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற நிதி ஒதுக்க அரசு முன்வருமா?” என்றும் வினவினார்.
இதற்கு பதிலளித்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், “கல்வராயன் மலை என்பது மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமாகும். அந்த இடத்தை மேம்படுத்த வேண்டி யது அவசியம். எனினும், அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப முதல்வரின் உத்த ரவை பெற்று கல்வராயன் மலை மேம் படுத்தப்படும்” என்றார்.