tamilnadu

img

பெரியார் சிலையை சேதப்படுத்திய குற்றவாளிகளை கைது செய்க

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜூலை 31-  மீஞ்சூரில் தந்தை பெரியாரின் மார்பளவு சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது  செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மீஞ்சூர் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 2010ம்  ஆண்டு தந்தை பெரியார் சிலை வைக்கப்பட்டது. இந்த  நிலையில் பெரியார் சிலையின் முகப்பு பகுதியை வியா ழனன்று (ஜூலை-30) இரவு  சமூக விரோதிகள் சேதப்ப டுத்தியுள்ளனர். அண்மைக் காலமாக தலைவர்களின் சிலையை  அவமானப்படுத்தும், சேதப்படுத்தும் போக்கு அதிக ரித்து வருகிறது. இந்நிலையில் மீஞ்சூர் பகுதியிலும்  மதவாத சக்திகளின் அராஜகம் அதிகரித்து, கல வரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டு வரு கின்றனர். இந்நிலையில் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், மாவட்டக் குழு  உறுப்பினர்கள் ஜி.விநாயகமூர்த்தி, பி.கதிர்வேல், நகர  செயலாளர் சாமுவேல் ஆகியோர் வெள்ளியன்று (ஜூலை 31) நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கோபால்,  பெரியார் சிலை சேதப்படுத்தியது குறித்து விசாரணை  செய்து, சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்,  பெரியார் சிலை உள்ள பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், சிலையை பாதுகாக்க கூண்டு  அமைக்க வேண்டும், சமூக அமைதியை ஏற்படுத்தும்  வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். சமூக வலைதளத்தில் பதட்டத்தை தூண்டும் வகை யில் சிலர் பதிவிட்டு வருவது தொடர்பாக புகார் கொடுக்கச் சென்ற திமுக நகரச் செயலாளர் மோகன்  ராஜ், சிட்டரசு, நித்தியக்குமார் ஆகியோர் மீது காவல்  துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது  கண்டிக்கத்தக்கது. திமுகவினர் மீதான வழக்கை ரத்து  செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

;