tamilnadu

img

கொரோனா தடுப்பு பணிக்காக அமைச்சர்கள் நியமனம்....

சென்னை:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும், கீழ்காணும் அமைச்சர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.

சென்னைக்கு அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், பி.கே.சேகர் பாபு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தா.மோ அன்பரசன், கோவைக்கு அமைச்சர்கள் அர.சக்கரபாணி, கா. ராமச்சந்திரன்.திருவள்ளூர் மாவட்டத்திற்கு அமைச்சர் சா.முக நாசர், மதுரைக்கு பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், ஈரோட்டிற்கு முத்துசாமி, சேலத்திற்கு வி.செந்தில்பாலாஜி.தூத்துக்குடி மாவட்டத்திற்கு அமைச்சர்கள் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், திருச்சிக்கு கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நெல்லைக்கு ஐ. பெரியசாமி, தங்கம் தென்னரசு.காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு எவ.வேலு, வேலூருக்கு துரைமுருகன், ஆர். காந்தி , விழுப்புரத்திற்கு க.பொன்முடி, செஞ்சி மஸ்தான், திருப்பூர் மாவட்டத் திற்கு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

;