பாசிச கருத்தியல் எதிர்ப்பு பிரச்சார கூட்டம்
கடலூர், மே 18- செஞ்சேனை பாசிசத்தை வீழ்த்திய 80-வது ஆண்டு தின பாசிச கருத்தியல் எதிர்ப்பு பிரச்சார கூட்டம் கடலூரில் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம், சிப்காட் செயலாளர் எம்.சிவானந்தம், நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் பி.ஸ்டீபன் ராஜ், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் எம்.பி. தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் பாசிசம் வீழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார், பி.கருப்பையன், வி.சுப்பு ராயன், ஜே.ராஜேஷ் கண்ணன், எஸ்.பிர காஷ், பி.வாஞ்சிநாதன், உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே. பக்கிராம் நன்றி கூறினார்.
பணியை பாதியில் நிறுத்திய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
ராணிப்பேட்டை, மே. 18 – அரக்கோணம், அனந்தாபுரம் ஊராட்சி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ. 3.50 லட்சம் மதிப்பீட்டில் 9 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் வேலை பெண் பணியாளர்கள் நடு கால்வாய் நீர் வரத்து கால்வாய் தூர்வாரும் பணியையும் கரைகளை பலப்படுத்தும் பணிகள் சனிக்கிழமையன்று (மே 17) மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நடு கால்வாய் நீர் வரத்து கால்வாய் கரையில் வசித்து வரும் 9 பழங்குடியினர் குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் PMJANMAN திட்டத்தில் தலா ரூ. 5.50 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வரும் இடத்தில் ஆய்வு செய்தார். அப்போது ஒப்பந்ததாரர் பணியை பாதியில் நிறுத்தி விட்டு சென்று விட்டார். புதிய ஒப்பந்ததாரர் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என தெரிவித்தார். பணியை பாதியில் நிறுத்திய ஒப்பந்ததாரர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து பணத்தை திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து உரியூர் ஊராட்சி கிராமத்தில் பழங்குடியின மக்கள் 4 குடும்பங்களுக்கு PMJANMAN திட்டத்தில் வீடுகள் கட்டப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து பணிகளை விரைவுப்படுத்த கேட்டுக் கொண்டார்.
கடலூர் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு
கடலூர், மே 18- கடலூர் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு 18 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. தேர்வு நிகழ்ச்சிக்கு கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் தலைமை தாங்கி வீரர்கள் தேர்வை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார், இணைச் செயலாளர்கள் செல்வராஜ், சகாய செல்வம், துணை செயலாளர் நடராஜன், தேசிய விளையாட்டு வீரர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து 18வயதுக்குட்பட்ட மாணவ- மாணவி களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்ட னர். இதில் கடலூர், நெய்வேலி, சிதம்பரம், குறிஞ்சிப் பாடி, பண்ருட்டி, திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் பயிற்சியாளர்கள் வடிவேல் முத்து, பாலாஜி, வினோத்குமார், பழனி, இள வரசன், யுவஸ்ரீ, விவேகானந்தன், காவியா, பார்த்தி பன், உள்பட கலந்து கொண்டனர். இந்த போட்டி யில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் சென்னை காட்டாங்குளத்தூ ரில் ஜூன் மாதம் 2-ம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.
தி.மலையில் மேற்படிப்பு குறித்து எஸ்எப்ஐ கல்வி வழிகாட்டுதல் '
திருவண்ணாமலை, மே 18- இந்திய மாணவர் சங்க திருவண்ணாமலை மாவட்ட குழு சார்பாக பள்ளி மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த “வாட் நெக்ஸ்ட்” கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி ஞாயிறன்று திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி. கோபிநாத் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் மு. செல்லன், எம்.கணபதி ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர். நிறைவாக மாணவர் சங்க மாநில துணை தலைவர் மு. தமிழ் பாரதி உரையாற்றினார். மாவட்ட தலைவர் இரா. விக்னேஷ் நன்றி கூறினார்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ. 38 லட்சம் பறிமுதல்
சென்னை, மே 18– சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த பயணிகளிடம் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த பயணி நரேஷிடம் சோதனை செய்த போது, கணக்கில் காட்டப்படாத ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அந்தப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரத்தில் விதை மாதிரிகளில் 2,392 மாதிரிகள் தரமற்றதாக அறிவிப்பு!
விழுப்புரம், மே 18- விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 22,826 விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 2,392 விதை மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது. வேளாண்மையின் உற்பத்திக்கு விதை அடிப்படையாகும். நிரந்தர உற்பத்தி, வளர்ச்சிக்கு விதைதான் அடிப்படை பொருளாகும். உழவர்களுக்கு தரமான விதைகள் கிடைக்க செய்வதற்காக தமிழ்நாடு அரசு, விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்புத் துறையின் கீழ் விதைப்பரிசோதனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் விதைப்பரிசோதனை நிலைய மானது, விழுப்புரம் பெருந்திட்ட வளா கத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தின் முதல் தளத்தில் இயங்கி வருகிறது.இங்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வக உப கரணங்களை கொண்டு விதைகளின் தரம் துல்லியமாக பரிசோதனை செய்யப்படு கிறது. இப்பரிசோதனையில் முளைப் புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம், பிற கலப்பு ஆகியவை கண்டறியப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலையத்தில் நெல், பயிறுவகைகள், எண்ணெய்வித்து பயிர்கள், பருத்தி, காய்கறிகள் மற்றும் இதர பயிர்கள் ஆய்வு செய்யப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் நெல் விதை மாதிரிகள் 10,563, சிறு தானியவிதை மாதிரி கள் 2,107, பயறு வகை பயிர்கள் 6,025 விதை மாதிரிகளும், எண்ணெய்வித்து பயிர்கள் 1,850 விதை மாதிரிகளும், காய்கறி பயிர்கள் 1,153, பருத்தி 988 விதைமாதிரிகள், இதர விதை மாதிரி கள் 140 என 22,826 விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 2,392 விதை மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலமாக தரமான மற்றும் நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகள், விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்வதில் விழுப்புரம் விதைப்பரி சோதனை நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.
பொதுமக்களுக்கு வாலிபர் சங்கம் சார்பில் நீர்மோர்
திருவண்ணாமலை,மே 18- திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுகாவில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் ஆத மங்கலம் பகுதிக்குழு சார்பில் நீர்,மோர், பழச்சாறு வழங்கப்பட்டது. கல்பாக்கம் அடுத்த கீழ்ப்பாலூர், வீரளூர் மற்றும் ஆதமங்கலம் புதூரில் ஆகிய மூன்று கிளைகளில் ஞாயிறன்று பொது மக்க ளுக்கு வழங்கப்பட்டது. கீழ்பாலூரில் மாவட்ட தலை வர் முருகன், வீரளூரில் மாவட்ட செயலாளர் சிஎம்.பிரகாஷ், ஆத மங்கலம் புதூர் கிளையில் முன்னாள் மாவட்ட செயலாளர் பி. சுந்தர் ஆகியோர் துவக்கி வைத்தனர். வாலிபர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் தியாகராசன், சத்யராஜ், ஏகாம்பரம், அருண்குமார், சின்ன கவுண்டர், தங்கம், திருமுருகன், சிவகுமார், ஜோதி, பழனி, குமார், அர்ஜுனன், அன்பு மற்றும் ஏராளமான பொது மக்கள்இதில் கலந்து கொண்டனர்.
உளுந்தூர்பேட்டை தேன்குணம் கிராமத்தில் கழிவுநீர் தேக்கம்
கள்ளக்குறிச்சி, மே 18 - உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தேன்குணம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய்களில் சுமார் மூன்றடி உய ரத்திற்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் அது கொசுக்களின் வாழ்விடமாக மாறி உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு வகையான நோய்த்தொற்று ஏற்பட்டு வருவதால் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே உள்ள தேன்குணம் கிரா மத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிரா மத்தில் ஐந்து தெருக்களின் கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் இறுதியாக ஊரிலிருந்து வெளியே செல்வதற்கு வழியில்லாமல் ஒரு வீட்டை சுற்றி தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்அந்த தெருவில் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள குழந்தை கள் முதியவர்கள் அடிக்கடி நோய்வாய்ப் பட்டு வருகின்றனர். மேலும் இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்க ளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது, பஞ்சாயத்து நிர்வாகத்திடம் இது குறித்து முறையிட்ட போது சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆகவே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு சாக்கடை நீரை வெளியேற்றுவதற்கான வழிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.