சென்னை பெருநகர காவல் துறை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டம் சார்பில் தியாகராய கல்லூரியில் இருந்து தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை வரை சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதை வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் சதாசிவம் கொடியசைத்து துவக்கி வைத்து மாணவர்களுடன் ஓடி உற்சாகப்படுத்தினார். இதில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். காவல்துறையின் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்கள் கிளாஸின் டேவிட், ராஜன் பாபு, முருகன் குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் கீதா, சுப்புலட்சுமி, சஜிபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.