tamilnadu

img

மேலும் 4 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன...  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்....

சென்னை:
தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. தடுப்பூசி  போடும் பணிதீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா தொற்றுவேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில்,தமிழகத்திற்கு கோவாக்சின் 2 லட்சம் டோஸ், கோவிஷீல்டு 2 லட்சம் டோஸ் என மொத்தம்  4 லட்சம் டோஸ்தடுப்பூசிகள் வந்துள்ளன . இதுவரை  மத்திய அரசிடம் இருந்து 67.85 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.  தற்போது வந்துள்ள  4 லட்சம் தடுப்பூசிகளும் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என்று அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

;