சென்னை:
தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. தடுப்பூசி போடும் பணிதீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா தொற்றுவேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில்,தமிழகத்திற்கு கோவாக்சின் 2 லட்சம் டோஸ், கோவிஷீல்டு 2 லட்சம் டோஸ் என மொத்தம் 4 லட்சம் டோஸ்தடுப்பூசிகள் வந்துள்ளன . இதுவரை மத்திய அரசிடம் இருந்து 67.85 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. தற்போது வந்துள்ள 4 லட்சம் தடுப்பூசிகளும் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.