tamilnadu

img

எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார் அன்னியூர் சிவா!

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் அ.சிவா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்த நா.புகழேந்தி, உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததையொட்டி நடைபெற்ற  இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சாா்பில் டாக்டா் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது. இதில், தி.மு.க.வை சேர்ந்த அன்னியூர் சிவா மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று 67,757 வாக்குகள் வித்தியாசத்தில்  அமோக வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் அ.சிவா இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.