tamilnadu

அண்ணாமலை பல்கலை. அரசுடமை விவகாரம் சட்டப்பேரவையில் அதிமுக - திமுக விவாதம்

அண்ணாமலை பல்கலை. அரசுடமை விவகாரம் 
சட்டப்பேரவையில் அதிமுக - திமுக விவாதம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப் பட்ட விவகாரத்தில் அதிமுக-திமுக வினருக்கு இடையே சட்டப்பேரவை யில் காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் வரு வாய்த் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் சிதம்பரம் தொகுதி அதிமுக உறுப்பி னர் கே.ஏ.பாண்டியன் பேசும் போது, “சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகம் அதிமுக ஆட்சியில் அரசுடமையாக்கப்பட்டது. ஆனால், அங்கு மருத்துவ வசதிகள் இன்னும் மேம்படுத்தவில்லை. இரவு நேரத்தில் நெஞ்சு வலி என்று போனால் கூட ஆஞ்சியோ செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், விபத்தில் காயங்களுடன் வருபவர்களுக்கு ஒரு பரிசோதனை கூட எடுக்க முடிய வில்லை”என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் மா.சுப்ரமணி யன்,“தனியாரிடம் இருந்த அந்த மருத்துவமனை அரசுடமை யாக்கப்பட்டது. மருத்துவமனையில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு, ரூ.12.98 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள 200 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது”என்றார். தொடர்ந்து பேசிய கே.ஏ. பாண்டியன்,“மிகப்பெரிய மருத்துவ மனையில் ஆஞ்சியோ செய்ய முடியவில்லை. இரவு விபத்தில் சிக்கி வருபவர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். ஆனால் போதிய வசதிகள் இல்லை” என்றார். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு பேசு கையில், “கடலுார் மாவட்டத்தில் புதி தாக மருத்துவக் கல்லூரி கட்ட கடந்த திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த மருத்துவ மனையை அதிமுக ஆட்சியில் கட்டாமல் அப்படியே விட்டுவிட்டு தேவையில்லாமல், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரியை அரசு கையகப்படுத்தியது. இப்போது பழியை எங்கள் மீது சுமத்துகிறீர்கள்”என்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், “அண்ணாமலை பல்கலைக்கழகம் சுயநிதி கல்லூரியாக இருந்தது. ஆண்டுக்கு ரூ.6 முதல் 9 லட்சம் வரை கட்டணம் பெற்று வந்தார்கள். அதைதான் அரசுடமை யாக்கினோம்”என்றார். மீண்டும் பேசிய கே.ஏ. பாண்டியன்,“கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடல் நீர் ஊருக்குள் புகுந்து விடாமல் தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும். கடல் நீர் ஊருக்கும் புகுந்தால், வயல்கள் நாசமாகி வருகிறது. அதிமுக ஆட்சியில் பல்வேறு புதிய மாவட்டங்கள் உரு வாக்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஒரு மாவட்டம் கூட புதிதாக பிரிக்கவில்லை. சிதம்பரத்தை மையமாக கொண்டு, புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்”என்றும் கோரிக்கை விடுத்தார்.