tamilnadu

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளாத தமிழகத்திற்கு நிதி தர மறுக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும்  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்கத்தின் மாநில துணைத் தலைவர்.குமரவேல்,மாவட்டத் தலைவர் பூபதி, மாணவர் சங்கத்தினர் அம்பேத், சௌமியா, சிவன்ராஜ், செங்கதிர், சபரி, சுனில் ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

சிதம்பரம் ரயில் நிலைய வாயில் முன்பு  அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.  மதுப்பிரியர்களின் அட்டூழியத்தால் ரயில் பயணிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இந்த கடையை உடனடியாக அகற்ற  வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.