சென்னை, ஜூன் 20 - கொரோனா சிகிச்சை முகாம் கள் அமைக்க அண்ணா பல் கலைக்கழக விடுதிகளை ஒப்ப டைக்குமாறு சென்னை மாநக ராட்சி பல்கலைக்கழக நிர்வா கத்துக்கு கடிதம் அனுப்பியது. விடுதிகளை தர மறுத்து பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா பதில் கடிதம் அனுப்பினார். விடுதியை தராவிடில் பேரிடர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக் கப்படும் என்று சென்னை மாநக ராட்சி எச்சரித்தது. இதனை யடுத்து கொரோனா சிகிச்சைக்கு இடத்தைத் தர வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. மறுத்தால் சட்டப்படி கைப்பற்றப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. இதனை யடுத்து மாணவர் விடுதியை தரு வதற்கு அண்ணா பல்கலைக்கழ கம் ஒப்புதல் அளித்துள்ளது. அங்கு புதிதாக மேலும் ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.