சென்னை, செப்.15- முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் செப்டம்பர் 15 அன்று தமிழ்நாடு அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணாசாலை யில், அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, செகர்பாபு, நாடாளு மன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். காஞ்சிபுரத்தில் அண்ணாவின் நினைவு இல்லத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பவள விழா லட்சினை திறப்பு
திமுகவின் பவள விழா செப்டம்பர் 17 அன்று கொண்டாடப் படுகிறது.அதற்கான லட்சினையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.