அறிஞர் அண்ணாவின் எழுத்து, பேச்சு, படைப்புகள் ‘அண்ணா அறிவுக்கொடை’ என்ற பெயரில் 110 தொகுதிகளாக தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,விஐடி பல்கலை கழக வேந்தர் கோ.விஸ்வநாதன், தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் அண்ணா அறிவுக்கொடை’ தொகுப்பாசிரியர் புலவர் செந்தலை கவுதமன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.