சென்னை, செப். 12 - அங்கன்வாடி திட்டத்தை தனியாரிடம் கொடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்த ப்பட்டுள்ளது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 3வது மாநாடு வியாழனன்று (செப்.12) கிண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய மாக 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியருக்கு 10 லட்சம் ரூபாயும், உதவியாளருக்கு 5 லட்சம் ரூபாயும் பணிக்கொடையாக வழங்க வேண்டும், மாத ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், மத்திய அரசு அறிவித்த கூடுதல் ஊதியத்தை வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்றவற்றை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 3 ஆண்டு பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்கு பொது மையத்திற்கு பணி மாறுதல் வழங்க வேண்டும், புதிதாக தொடங்கப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பயிற்சிபெற்ற தகுதியுடைய பணியாளர்களைக் கொண்டு பணிமூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஆர். பத்மாவதி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே. குமாரி வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் ஜி. மார்கிரேட் கொடி யேற்றினார். இணைச் செயலாளர் ஆர்.ஆரோக்கியமேரி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டி பாபு மாநாட்டை தொடங்கி வைத்தார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் எஸ். ஹேமப்பிரியாவும், வரவு செலவு அறிக்கையை பொருளா ளர் கே. நிர்மலாவும் சமர்ப்பித்தனர். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பா. சித்ராசெல்வி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். கேசவன் உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின மாநில பொதுச் செயலாளர் டி. டெய்சி நிறைவுரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் சி. சாந்தகுமாரி நன்றி கூறினார்.