அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி செவ்வாயன்று (மார்ச் 4) தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ஜி. கலைமணி தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆ. தவராஜ், பொருளாளர் என். ரமேஷ், மாவட்ட துணை தலைவர் ஆர். மணிகண்டன், மாநில இணை செயலாளர் அமுதவள்ளி, மாவட்டச் செயலாளர் ஆர். ராதா, மாவட்டப் பொருளாளர் கே. மாலதி, ஆட்டோ சங்கம் மாவட்டப் பொருளாளர் கே. ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் மல்லிகா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், மாவட்டத் தலைவர் டி.முரளி, மாவட்ட துணைத் தலைவர் எம்.காசி, சங்க மாவட்டச் செயலாளர் ஜூலி, மாநிலக்குழு உறுப்பினர் தேவி, துணை செயலாளர் உமா, மாவட்ட துணைத் தலைவர் மல்லிகா உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.